Posts

Showing posts from November, 2009

கலாபன் கதை 5

இருள் அசைந்து உள்ளே நகர்ந்தது கலாபன் தன் விடுப்பு முடிந்து மறுபடி கப்பலுக்கு வந்தாகிவிட்டது. அது அவன் முன்பு வேலைசெய்த அதே கப்பல் அல்லவெனினும், எழுபதுகளில் ஜேர்மனியில் கட்டப்பெற்ற ஓரளவு நல்ல நிலையிலிருந்த கப்பல். அவன் ஏற்கனவே கப்பல் அனுபவம் வாய்த்திருப்பதறிந்த இரண்டாம் நிலைக் கப்பல் என்ஜினியர் காலை நான்கு-எட்டு மணிவரையான வேலைநேரத்துக்கு அவனை எடுத்துக்கொண்டான். என்ஜின் அறையிலுள்ள எந்திரங்களின் செயற்பாடுபற்றிய தொழில்நுட்ப அறிவினை ஓரளவு பெற்றிருந்த கலாபனுக்கு, புதிய கப்பலில் வேலைசெய்வது அப்படியொன்றும் கடினமானதாகத் தெரியவில்லை. அவன் கப்பலில் சேர்ந்த மூன்றாவது நாள் கப்பல் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு பாகிஸ்தானில் கராச்சி துறைமுகத்தைநோக்கி தன் பயணத்தைத் தொடக்கியது. எல்லோரும் நட்பாளர்களாக, பழக்கத்துக்கு இனியவர்களாக இருந்தாலும் கப்பலில் அவரவரும் பெரும்பாலும் தனித்தனி உலகம்தான். ஒரு மகிழ்ச்சி, ஒரு துக்கம் என்று எதுவிதமான குடும்பம் சார்ந்த காரியமும் உடனுக்குடன் அறிய வாய்ப்பில்லாத தொழில் அது. வெளிநாட்டு மண்ணில் வேலை செய்கிற ஒருவன், தன் தாய் அல்லது தந்தை அல்லது மனைவியரின் மரணத்துக்கு ஒர

கலாபன் கதை 4

இந்தியாவே கடலால் விழுங்கப்பட்டதுபோல்.. கஷ்ரங்களின் ஒவ்வொரு முடுக்கிலும் அவள் புன்னகையுடன் நின்று அவனை பித்தேற்றிக்கொண்டிருந்தாள். அந்த அழகும், அளவுகளும், குறுஞ்சிரிப்பும் அவனடைந்த உடல் மன வாதைகளையெல்லாம் ஆவியாய்க் கரைய வைத்தன. அவளையே உரித்துக்கொண்டு பிறந்திருந்த குழந்தைவேறு அவனது தொடரும் வாழ்வுக்கான புதிய அர்த்தம் சொல்லி குமிழ்ந்தெழும் சிரிப்புகளுக்குள் அவனை கிறங்கி நடக்கவைத்துக் கொண்டிருந்தது. க~;ரமென்பது உறுதலில் அடையப்படுவதில்லை. அதற்கொரு உளவியல் இருக்கிறது. க~;ரத்தை க~;ரமாக நினைக்காவிட்டால், க~;ரமென்பது க~;ரமாகத் தெரியாது என்று சீனப் பெரு ஞானியான தாவோ சொல்வான். தாவோ கடவுளில்லை, மனிதனில்லை, ஒரு கருத்துருவம் என்கிறது நவீன சிந்தனை. ஓடுகிற ஓட்டத்தோடு எல்லாம் அறிந்துகொண்டு கலாபன் தாவோ ஞானத்தில் ஒரு வழிக்குட்பட்டதாய் தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்டிருந்தான். க~;ரங்கள் அவனுக்குச் சுவைத்த விதம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. கலாபன் இரண்டாவது கப்பல் ஏறி ஓராண்டு ஆகிக்கொண்டிருந்தது. அந்த ஓராண்டில் நான்கு தடவைகள் நாற்பதாயிரம், அறுபதாயிரம், ஒரு முறை எண்பதாயிரமென்று ஏறக்குறைய இரண்டு லட்சம் ரூபாவு